இக்காலத்திற்கான கடவுளின் அவதாரமான பஹாவுல்லா இன்று உலகம் எதிர்நோக்கும் பிரத்தியேக பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தமது போதனைகளின் வாயிலாக வழங்குகின்றார். உலகம் முழுவதிலுமுள்ள பஹாய்கள் ஒரே ஒரு கூட்டு நோக்கம் மட்டுமே கொண்டுள்ளனர், அது உலக சீரமைப்பு குறித்ததாகும். “தூய்மையான மற்றும் நற்செயல்களின் வாயிலாகவும் மெச்சத்தகுந்ததும் மிகப் பொருத்தமானதுமான ஒழுக்கத்தின் மூலமாகவும் உலகம் சீர்திருத்தம் பெறக்கூடும்” எனும் பஹாவுல்லாவின் போதனைக்கிணங்க இன்று பஹாய்கள் உலகம் முழுவதும் பல நடவடிக்கைளில் ஈடுபட்டு உலக சீர்திருத்தத்திற்கு தங்களால் இயன்றவற்றைச் செய்துவருகின்றனர். இந்த வகையில் தமிழ் மட்டுமே அறிந்திருக்கும் பஹாய் அன்பர்களின் சேவைகளுக்கு மேலும் உதவிடும் வகையில் இவ்வலைப்பதிவிலுள்ள படைப்புக்கள் வழங்கப்படுகின்றன.

பாஹ்ஜி மாளிகையின் உட்புறத்திலிருந்து. இம்மாளிகையில்தான் பஹாவுல்லா தமது இறுதி நாட்களை கழித்து 1892ல் உயிர் நீத்தார்
“மனிதகுலம் முழுமைக்குமான சேவையில் தன்னை அர்ப்பனித்துக்கொள்ளும் மனிதனே உண்மையில் மனிதனாவான்.”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பஹாவுல்லாவின் பிறந்ததினம்
12 நவம்பரில் உலகம் முழுவதும் உள்ள பஹாய்கள் பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லாவின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவர்.
பல்லாயிரக்கணக்கான உள்ளூர்களில் – இல்லங்களில், பொது இடங்களில், உள்ளூர் மற்றும் தேசிய பஹாய் நிலையங்களில், மற்றும் பஹாய் வழிபாட்டு இல்லங்களிலும் ஒன்றுகூடல்கள் நிகழும்.
பஹாய்கள் தங்கள் நண்பர்களையும் பிறரையும் பிரார்த்தனைக்காகவும், விசேஷ கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளவும், கலை நிகழ்ச்சிகளுக்காகவும், மற்றும் சிற்றுண்டிகளுக்காகவும் அழைப்பர்.
இந்நாள் பஹாய்கள் வேலைக்கு செல்லக்கூடாத ஒன்பது நாட்களில் ஒன்றாகும்.
பஹாவுல்லா இரான் நாட்டின் தெஹரான் நகரின் மேல் குடும்பம் ஒன்றில் 1871ல் பிறந்தார்.
அவர் 1853ல் தமது தாய்நாட்டிலிருந்து பாக்தாத் நகருக்கு நாடுகடத்தப்பட்டு அங்கு 1863ல் கடவுளிடமிருந்து தாம் உலக மக்களை ஒற்றுமைபடுத்தும் ஒரு புதிய செய்தியை தாங்கி வந்திருப்பதாக அறிவித்தார். அவர் பிறகு பாலஸ்தீன பிரதேசத்தின் (இன்று இஸ்ரேல்) ஆக்கா நகருக்கும் நாடுகடத்தப்பட்டார். அங்கு அவர் 1892ல் விண்ணேற்றம் அடைந்தார்.
நவம்பர் 12