இக்காலத்திற்கான கடவுளின் அவதாரமான பஹாவுல்லா இன்று உலகம் எதிர்நோக்கும் பிரத்தியேக பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தமது போதனைகளின் வாயிலாக வழங்குகின்றார். உலகம் முழுவதிலுமுள்ள பஹாய்கள் ஒரே ஒரு கூட்டு நோக்கம் மட்டுமே கொண்டுள்ளனர், அது உலக சீரமைப்பு குறித்ததாகும். “தூய்மையான மற்றும் நற்செயல்களின் வாயிலாகவும் மெச்சத்தகுந்ததும் மிகப் பொருத்தமானதுமான ஒழுக்கத்தின் மூலமாகவும் உலகம் சீர்திருத்தம் பெறக்கூடும்” எனும் பஹாவுல்லாவின் போதனைக்கிணங்க இன்று பஹாய்கள் உலகம் முழுவதும் பல நடவடிக்கைளில் ஈடுபட்டு உலக சீர்திருத்தத்திற்கு தங்களால் இயன்றவற்றைச் செய்துவருகின்றனர். இந்த வகையில் தமிழ் மட்டுமே அறிந்திருக்கும் பஹாய் அன்பர்களின் சேவைகளுக்கு மேலும் உதவிடும் வகையில் இவ்வலைப்பதிவிலுள்ள படைப்புக்கள் வழங்கப்படுகின்றன.

பாஹ்ஜி மாளிகையின் உட்புறத்திலிருந்து
“மனிதகுலம் முழுமைக்குமான சேவையில் தன்னை அர்ப்பனித்துக்கொள்ளும் மனிதனே உண்மையில் மனிதனாவான்.”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பஹாவுல்லாவின் பிறந்ததினம்
நவம்பர் 12